Wednesday, June 11, 2008

என்னை கவர்ந்த கவிதைகள் 4

நீ மட்டுமே தெரிகிறாய்
________________________________________
உன்னை பார்த்த பிறகுதான்
என்னுள் எத்தனை
மாற்றங்கள்
அனைத்தும் பிடித்துவிட்டது
உன்னையும் சேர்த்து….
என்னை நானே ரசிக்கிறேன்
உன் சிரிப்பை என்னை
என்னுள் குதூலிக்கிறேன்
உன் பார்வை பார்த்து
நீ கடித்த அப்பளம்
போலதான் நானும்
நொறுங்கி போகிறேன்
உன்னை ஒரு நாள்
கானாவிடில் சோகத்தின்
சிம்மாசனத்தில் அமர்கிறேன்
என்னாச்சு எனக்கு
எல்லோரும் கேட்க
எனக்கே தெரியவில்லை
என்னாச்சு எனக்கென்று
கண்மூடி யோசித்து
பார்த்தால்
நீ மட்டுமே
தெரிகிறாய்.....ஆ
இது கூட நல்லாயிருக்கே
இனி
எப்பொழுதும் யோசிப்புதான்...

நன்றி நம்பிகோபாலன்(தமிழ் மன்றம் .com)

0 comments: