Wednesday, June 4, 2008

என்னை கவர்ந்த கவிதைகள்

உன் கனவுகளை தேடுகிறேன்
உன் கனவுகளை
தேடுகிறேன்எதில் ஒளித்தாய்?
நான் உண்ணும் உன் புன்னகையிலா?
இல்லை....உன் பார்வை என்னும் சவுக்க்குகளிலா?
எதில் ஒளித்தாய்?
கடைசிப்பக்கம் தொலைந்த மர்ம நாவலாகிப்போனாய்-நீ எனக்கு.
எதில் மலர்வாய்?
எதில் உலர்வாய்?
எப்போதும் போல் குழப்பந்தான்.
ஆனாலும்,
உன்னில் என்றும் வசிக்கிறேன்.
உன் கனாக்களை தேடுவதில் என் காலத்தை கழிக்கிறேன்.
நீ மட்டும்அப்படியே இருஎன் வாழ்வின் சுவாரசியங்கள்உன்னில்தான் நிரம்பி வழிகின்றன

நன்றி அகத்தியன் (தமிழ் மன்றம் .com)

0 comments: