Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Wednesday, June 4, 2008

என்னை கவர்ந்த கவிதைகள் 2

உன் ஞாபக தொல்லைகள்
--------------------------------------------------------------------------------
இன்றும் தொடங்கிற்றுஉன் ஞாபக தொல்லைகள்
அச்சோதனை சாவடியில்எல்லோரும் பொதிகளோடு இறங்க,

எப்போதும் போல்,
நான் மட்டும் உன் ஞாபக சுமையோடு இறங்குவேன்.
காலம் விழுங்கிய உன்னைஎன்றும் ஞாபகப்படுத்தும்- அவள்,

காக்கி உடையோடு...நீதான் நீயேதான் என மனம் கூவும்;
அடம்பிடிக்கும்ஆனாலும்,
காலம் உன்னை தொலைக்க காரணமும்,
அவள் அணிந்துள்ள காக்கிதான்உண்மை சுட எப்போதும் போல் அடையாள அட்டையுடன் முடித்து கொள்வேன்.
உன்னையும் உன் ஞாபகங்களையும்.

நன்றி அகத்தியன் (தமிழ் மன்றம் .com)

என்னை கவர்ந்த கவிதைகள்

உன் கனவுகளை தேடுகிறேன்
உன் கனவுகளை
தேடுகிறேன்எதில் ஒளித்தாய்?
நான் உண்ணும் உன் புன்னகையிலா?
இல்லை....உன் பார்வை என்னும் சவுக்க்குகளிலா?
எதில் ஒளித்தாய்?
கடைசிப்பக்கம் தொலைந்த மர்ம நாவலாகிப்போனாய்-நீ எனக்கு.
எதில் மலர்வாய்?
எதில் உலர்வாய்?
எப்போதும் போல் குழப்பந்தான்.
ஆனாலும்,
உன்னில் என்றும் வசிக்கிறேன்.
உன் கனாக்களை தேடுவதில் என் காலத்தை கழிக்கிறேன்.
நீ மட்டும்அப்படியே இருஎன் வாழ்வின் சுவாரசியங்கள்உன்னில்தான் நிரம்பி வழிகின்றன

நன்றி அகத்தியன் (தமிழ் மன்றம் .com)